Kadal Kavidai

Friday, December 23, 2011

வைரமுத்து அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சினையில்``படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்''
கவிஞர் வைரமுத்து அறிக்கை


சென்னை, டிச.22-

``முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.



அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

``முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் ïனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

படைப்பாளிகள்

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். ``முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்

Monday, December 19, 2011

எல்.ஆர்.ஈஸ்வரி தான் ஒஸ்தி.



1958-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பின்னணி பாடகி, எல்.ஆர்.ஈஸ்வரி. 50 வருடங்களை தாண்டி திரையுலகில் இருந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


சிவாஜிகணேசன்-சாவித்ரி நடித்த ‘பாசமலர்’ படத்தில் நான் பாடிய “வாராயோ தோழி வாராயோ” என்ற பாடல்தான் அவரை பிரபலமாக்கியது.

அவர் பாடலை கேட்கும் போதே ஆட்டம் தானாக வரும் . அவர் பாடிய பாடல்களில் அதிக பாடல்கள் துள்ளல் இசை பாடல்கள் .(துள்ளல் இசை பாடல்கள் = குத்து பட்டு :- நன்றி இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி ஷுன்முகம் )

சமிபத்தில் ஒஸ்தி படத்தில் இருந்து "கல்லாச கல கலா" என்ற பாடலை TR உடன் இனைந்து பாடியுள்ளார் . இந்த வயதிலும் மிக நன்றாக உள்ளது அவரது குரல் வளம்.


என் நண்பர்கள் பாடலை கேட்டு விட்டு என்னிடம் சொன்னது :-- இந்த தள்ளாத வயதிலும் துள்ளல் இசை பாடல்கள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி தான் ஒஸ்தி.

clicl here to hear kalasala kalasala.mp3

Saturday, December 3, 2011

கணினி என்ன பால்?!

இந்திஆசிரியர் பால் வேறுபாடுகளைப் பற்றி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.தமிழ் போல் இல்லாமல் இந்தியில் அஃறிணைக்கும் பால் வேறுபாடுகள் உண்டு.மூக்கு பெண்பால் என்றும் நாக்கு ஆண்பால் என்றும் என்னென்னவோ சொல்வார்கள்.



ஒரு மாணவன் எழுந்து கேட்டான்”ஐயா,கணினி என்ன பால்?”


இதற்குப் பதிலளிக்காமல் ஆசிரியர்,ஆசிரியர் மாணவர்களையும் மாணவிகளையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து அவர்களையே தீர்மானம் செய்து அவர்கள் முடிவுக்கான மூன்று காரணங்கள் எழுதச் சொன்னார்.


மாணவர்கள் கணினி பெண்பால் எனத்தீர்மானித்து அதற்கான கீழ் வரும் காரணங்களை எழுதினார்கள்—


1அவற்றின் உள்ளே உள்ள அடிப்படை ஏரணத்தைப் படைத்தவன் அன்றி வேறொருவரும் அறிய இயலாது.


2.சின்னச் சின்னத்தவறுகள் கூட நீண்ட கால நினைவில் வைத்திருந்து, வேண்டும்போது எடுக்க இயலும்.


3.ஒன்றை சொந்தமாக்கிக் கொண்டால் அதன்பின் அதற்கான உபகரணங்களில் பாதிச் சம்பளம் போய் விடும்.



மாணவிகள் அது ஆண் என முடிவு செய்து எழுதினார்கள்—


1.எல்லாத் தகவலும்இருக்கும்.ஆனால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாது.


2.அவை நமது பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும்.ஆனால் பாதி நேரம் அவையே பிரச்சினையாகி விடுகின்றன.


3.ஒன்றைச் சொந்தமாக்கிய பின்தான் தெரியும் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் இதை விடச் சிறந்தது கிடைத்திருக்கும் என!


ஆசிரியர் மாணவிகள் வென்றதாக அறிவித்தார்.

Thursday, November 24, 2011

ஜார்ட்-வேர்ட் ப்ராசசர்

லிடுர்ட்பேட் மற்றும் நோட்பேட் பற்றி அறிந்திருப்பீர்கள். பலரும் பயன் படுத்தி வருவீர்கள். இவற்றிற்கு மாற்றாக நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.



இதன் இன்னொரு சிறப்பு, இதில் மெனு தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடத் தேவை யில்லை. அதாவது, கர்சரை மெனு அருகே கொண்டு சென்றாலே, மெனு விரிந்து கொடுக்கிறது. ஐகான்கள் மற்றும் பிற மெனுக்கள் கிடைக்கின்றன. இதிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், வழக்கம்போல கிளிக் அடிப்படையிலான இயக்கத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
இதன் இன்டர்பேஸ் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவை Minimal (NotePad போல), Compact, மற்றும் Classic ஆகும்.


இதன் சில அம்சங்களைக் காணலாம். word, page, line மற்றும் character ஆகியவற்றை எண்ணி அறியலாம். தேதி, நேரம், படங்கள், ஹைப்பர்லிங்க், டேபிள், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஈக்குவேஷன்கள், ஆப்ஜெக்ட்டுகள் ஆகியவற்றை விரும்பும் இடத்தில் இணைக்கலாம். டிக்ஷனரி, தெசாரஸ் ஆகியவற்றுடன் ஸ்பெல் செக் வசதி தரப்பட்டுள்ளது. பல பைல்களை இயக்கினால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு இயக்க டேப் வசதி தரப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் பயன்படுத்தி சலிப்பு கொண்டவர்களுக்கு இந்த ஜார்ட் டெக்ஸ்ட் எடிட்டர் வித்தியாசமாகவும், வசதிகள் பல கொண்டதாகவும் இருக்கும்.
இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதன் வேகம். மிக வேகமாகத் திறக்கப்பட்டு, இயக்கத்திற்குக் கிடைக்கிறது. இது மற்ற எந்த வேர்ட் ப்ராசசரிலும் கிடைக்காத ஒரு வசதி. மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராம் இயங்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதனை நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளோம். அந்த பிரச்னை இங்கு இல்லை. நான்கு விநாடிகளில் இந்த ஜார்ட் புரோகிராம் இயங்கத் தொடங்குகிறது.


இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்வதும் இன்ஸ்டால் செய்வதும் மிக மிக எளிது. இதனை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்தும் இயக்கலாம்.
www.jarte.com/download.htmlஎன்ற இணைய தள முகவரியிலிருந்து இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.

Saturday, November 19, 2011

ஏழாம் அறிவும்,வேலாயுதமும்!

நான் எப்போதுமே கொஞ்சம் தாமதம்.


எனவேதான் ஏழாம் அறிவு ,வேலாயுதம் பற்றி எழுதுவதில் இவ்வளவு தாமதம்.


லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து விட்டேன்!


இதோ----




மனிதர்கள் ஆறறிவு உள்ளவர்கள் என்று சொல்கிறோம்.


இந்த ஆறறிவுகள் எவை?


தொல்காப்பியர் சொல்கிறார்---


“ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே”


மெய்,வாய்,மூக்கு,கண்,காது ஆகியவற்றோடு மனம் என்பதை ஆறாவது அறிவாகச் சொல்கிறார் தொல்காப்பியர்.


இதையே நாம் பகுத்தறிவு என்கிறோம்.


அப்படியானால் ஏழாம் அறிவு என்பது என்ன?


திரைப்படம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.நான் பார்க்க வில்லை
காலத்தைக் கடந்தது முக்காலமும் அறியும் திறன்தான் ஏழாம் அறிவா?


அக்காலத்தில் ஞானிகளுக்கு ஞான திருஷ்டி இருந்ததுஎன்று சொல்வார்களே அதுதான் ஏழாம் அறிவா?


அப்படியென்றால் அது வேண்டவே வேண்டாம்! வருவதைத் தெரிந்து கொண்டால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.ஒரு படத்தில் மற்றவர் மனதில் இருப்பதை அறியும் சக்தி பெற்று விவேக் கஷ்டப்படுவாரே,அது போல.


வேண்டாம் ஏழாம் அறிவு!


ஏழாம் அறிவைப் பற்றிப் பேசி விட்டோம்.


இனி வேலாயுதம்.


சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களையெல்லம் துன்புறுத்தி,இந்திரனையும் சிறைப் படுத்தி விட்டான்.


அவனை அழிப்பதற்காக முருகன் உருவானான்.


முருகன் போருக்குச் செல்லும்போது,அன்னை பார்வதி முருகனிடம் ஒரு சக்தி வேல் கொடுத்தாள்,சூரனைக் கொல்லும் ஆயுதமாய்.அதுதான் வேலாயுதம்.


சூரனையே பிளந்த ஆயுதம் வேலாயுதம்!


காக்க காக்க கனக வேல் காக்க!

Sunday, November 13, 2011

108 சேவை

இன்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தி
இது.





108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.


ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.


நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான்.


இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி: ஹிந்து நாளிதழ்

Tuesday, November 8, 2011

இனி இதுவும் நடக்கலாம் ......



இனி இதுவும் நடக்கலாம் ......

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!
ஒரு வெப்சைட்டினை மதிப்பீடு(website value) செய்வது எப்படி? வெப்சைட்டின் பண விகிதம், விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டும்? என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்..

http://www.cwire.org/website-value-calculator/




இந்த www.vino-kannan.blogspot.comன் மதிப்பு $67 என காட்டுகின்றது..பலே!! பலே!!
அலக்ஸா ரேங்க்(Alexa Traffic Ranking): 7,857,181
www.alexa.com

Friday, November 4, 2011

யு.எஸ்.பி. ப்ளாஷ் லாக்

உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன் படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர் (Predator) என்ற புரோகிராம் தருகிறது. இதனை www.montpellier-informatique.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி பிரிமியம் புரோகிராம் பெறலாம்.




நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வெளியே சென்றாலும், பிரிடேட்டர், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.
பிரிடேட்டர் புரோகிராமினை, விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு. அல்லது நீங்கள் விரும்பும் போது, அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின், தொடர்ந்து நீங்கள் கம்ப்யூட்டரில் பணியை மேற்கொள்ளலாம். சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால், கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன், உங்கள் மானிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.

நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து, பணியைத் தொடரலாம். மானிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும். இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி, மீண்டும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து, பாஸ்வேர்டைத் தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால், கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

அனுமதி பெறாதவர் கம்ப்யூட்டரை இயக்க முற்படுகையில், பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.

இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டிலும் காட்டும். இதனால், இன்னொரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த அக்கவுண்ட்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை, பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து டேட்டா வினையும் ஒருவர் காப்பி செய்தாலும், அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.

ப்ளாஷ் தொலைந்து போனால், கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கம்ப்யூட்டர் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.

தவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், கம்ப்யூட்டரிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கலாம். முயற்சி செய்து பாருங்களேன்.

Friday, October 14, 2011

இவர்களும் நானும் ......












இவர்கள் வரிசையில் நான் ??
எப்படி ?

......

எந்த ஒரு பள்ளியிலும் யூனிஃபார்ம் அணிந்த பிள்ளைகளுக்கு மத்தியில் யாராவது ஒரு பிள்ளை வண்ண உடை அணிந்து காணப்பட்டால் அது பிறந்தநாள்குழந்தை என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வாய் நிறைய சிரிப்பும், கையில் சாக்லெட் டப்பாவுமாக அன்றைக்கு முழுக்க அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். ரொம்பவும் வயதில் சிறியதாக இருந்தால் சாக்லெட் டப்பாவில் பாதியை அதுவே காலி பண்ணிவிடும்.
‘பாப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லெட் குடுத்தியா? டப்பா காலியா இருக்கு?’

‘கௌஷிக் மூணு சாக்லெட்ட புடுங்கிட்டான்ம்மா.’

‘அதுசரி. நீ எல்லாருக்கும் குடுத்தியா?’

‘சி.வசுமதி வாங்கி தின்னுட்டு நீ குடுக்கவே இல்லெடின்னா.’

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆளாளுக்கு, ஊர் ஊருக்கு மாறுபடுகின்றன.

ஆனால் சிறுவயது முதல் எனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேறு விதமாக இருந்தது.

"கொடியது கொடியது இளமையில் வறுமை. "

என்பதற்கு எடுத்துகாட்டு அனேகமாக நானாக தான் இருக்கும். வீட்டில் ஒரே ஆண் பிள்ளை என்றாலும் எனது எந்த ஒரு பிறந்த நாளுக்கும் கேக் வெட்டியதாக நினைவு இல்லை.

பிறகு வசதி மற்றும் எனக்கு வேலை கிடைத்த பின் ஏனோ பிறந்த நாளுக்கு கேக் வெட்ட மணமில்லை.

எனது அப்பா மிக அதிகமாக சாமி கும்பிடும் பழக்கம் உடையவர். என்னையும் சாமி கும்பிட சொல்லுவர். ஒரு காலகட்டத்தில் இது ஒரு மூடநம்பிக்கை என்று உணர்த்த நான் பகுத்தறிவோடு கோவிலுக்கு செல்வதை தவிர்த்தேன் . இதற்கு எனது காலம்சென்ற சித்தப்பா திரு முத்துசாமி தான் முன் உதாரணம் . (முத்துசாமி சித்தப்பா எனது அம்மாவின் சகோதரி கணவர்.) அவர் மாக்சிச சிந்தனை உடையவர். சேகு வேரா , லெனின் , பிடல் காஸ்ட்ரோ போன்றவர்களை எனக்கு புத்தகம் வழியாக அறிமுக படித்தினார். அவர் முலமாக தமுஎச , DYFI போன்றவற்றில் என்னை இணைத்துகொண்டேன்.

பொதுவாக நங்கள் இருவரும் ஒன்றாக சென்று தான் தீபாவளி மற்றும் எங்கள் பிறந்த நாள் (எனக்கு 19 -10 சித்தப்பாவிற்கு 29 -10 ) க்கு துணி எடுப்போம்.வாழ்கை சக்கரம் சீராக சென்று கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு கொடிய புற்று நோய் தாக்கியது .நண்பன் ராமமூர்த்தி அப்பொழுது மருத்துவபடிப்பு படித்துகொண்டு இருந்தான். அவனிடம் புற்று நோய் பற்றி கேட்டபோது இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றான்.

பல இடங்களில் பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சென்னை Appollo மருத்துவமனை சென்று ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்ற பிறகும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். அப்போது சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை பற்றி தெரிந்து கொண்டேன்.

இந்த அடையாறு புற்று நோய் மருத்துவமனை மத்திய அரசிடம் நீதிகளை பெற்று புற்று நோய் தன்மைக்கு தகுந்தால் போல் இலவசமாக சிகிச்சை செய்கிறது. மேலும் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கதுக்காக மத்திய அரசிடம் இருந்தும் , பொது மகளிடம் இருந்தும் நன்கொடை பெற்று புற்று நோய்க்கு மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

சித்தப்பா இறந்த பின் ஏனோ எனக்கு மீண்டும் பிறந்த நாள் கொண்டாட விருப்பம்இல்லை. எனவே அந்த தொகையை கடந்த சில வருடங்களாக அடையாறு புற்று நோய் மருத்துவ ஆராய்சிக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறேன் .

இந்த பதிவில் புகைபடத்தில் உள்ள அனைவரும் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமைக்கு நீரந்தர கொடையாளிகள். இந்த வரிசையில் நான் கடைசியாக இருப்பேன் என நம்புகிறேன்.

நான் இறபதற்கு முன் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கபட்டால் நான் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்...

எனவே நண்பர்களே உங்கள் வருமானத்தில் சிறு பகுதியாவது மருத்துவ ஆராய்ச்சி கொடுங்கள்.... இந்த பதிவை நான் எழுதிகொண்டிருக்கும் பொழுது புற்று நோயால் இறந்து விட்ட Apple Co -Founder Steve jobs அவர்களுக்கு எனது அஞ்சலியை சபர்பிகிறேன் ....

விழுவதும் ! எழுவதற்கே!!

Click Here to View Cancer Institute Web Page.



இணைப்பு :
ஆண்டு வரிசையாக அடையாறு புற்று நோய் மருத்துவமனை நன்கொடை ரசிது.









Saturday, October 8, 2011

என் தந்தை


தோற்றம் 25/12/1950 மறைவு 02/10/2011



தந்தை!
நமது முகவரி !
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!

இமையத்தின் வலிமை,
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குள் தாங்கும்,
என் தந்தை குணம்!
யாரிடம் கிடைக்கும்!!

என் தந்தை மரணம்,
சொல்லமுடியாத, இழப்பு !
இந்த இழப்பை சொல்வதற்கு
வார்த்தைகள் இல்லை !!

மனம் பின்னோக்கி செல்லும்
தந்தையோடு வாழ்த்த, அந்த
காலத்தை காட்டும்!
கண்கள் குளமாகும் !

அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !!

Thursday, September 29, 2011

இவர்களும் நானும் ......












இவர்கள் வரிசையில் நான் ??
எப்படி ?

காத்திருங்கள் ...... அக்டோபர் 19 வரை ......


Tuesday, September 13, 2011

இந்தியன் ரயில் இன்போ

'இந்தியன் ரயில் இன்போ' வெப்சைட் கூகுள் குரோமிற்கு( google chrome browser ) பிரவுசர் நீட்டிப்பு(extension) ஒன்றை வழங்குகின்றது. இதனை இன்ஸ்டால் செய்தபின்பு பிரவுசரின் வலது மேற்புறத்தில் அமர்ந்துகொள்கின்றது. நமக்கு தேவையான போது இதனை கிளிக் செய்து ரயில் டிக்கெட் தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். முயற்சித்து பாருங்கள்..

லிங்க்:

இந்தியன் ரயில்வேஸ் .


Friday, September 9, 2011

செங்கொடி

கொடிக்காக-தன்னை
கொளுத்தி கொண்ட உயிர் உண்டு ;
உயிர் காக்க - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடிஉண்டா ?

உண்டு ;
அதன் பெயர் செங்கொடி;
இனிமேல் -
அது தான் என் கொடி!



தொன்மை தமிழர் எல்லாம் - ஒரு
தொப்புள் எழுந்த கொடி; இவள்
தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க -
வெப்புள் விழுந்த கொடி!

இது தான் -
எனது
வணக்கத்துக்குரிய கொடி! இதை -
வணங்காது வேறெதற்கு முடி ?

முஉயிர் விடு ! ஈடாக என் -
பூ உயிர் எடு !
என்று
எமனிடம் தந்தாள் தன்னை ;
செங்கொடி கண்ணியானினும் - மூன்று
சேய்களை காத்த அன்னை !

ஆம்;
அந்த -
கன்னி தீயாநாள் ; தீயாக -
கன்னி தாயானாள்!

பெருவாரியான நாடுகள்
பெரும் பிழை புரிந்தோரையும் -
சிறையில் வைக்க முயலுமேயன்றி -
சிதையில் வைக்க முயலாது;
ஏன்
எனில் -
சிதையில் வைத்தது தாவென்றால்
சீவனை வழங்க இயலாது !
----
மரண தண்டனைக்குதான்
மரண தண்டனை தர வேண்டும் ;
மானுடர்க்கு
மரணம் -
கயிறு வலி யல்ல ;
காலன் வழிதான் வர வேண்டும்;
----
விழிநிறைய கனாகளுமாய் ;
விடைதெரியா வீனாகளுமாய் ;
இருவது ஆண்டுகள்
இறந்து போனபின் .......

இம் முவருக்கு
இன்னமும் மீதமாய் -
இருக்கும் வாழ்வையும் - கயிறு

சுருக்கம் என்றால் ....

அது -
அரக்கம்;
இருக்க வேண்டாம்மா -

இரக்கம்?
-----
'கண்ணுக்கு
கண் !' - எனும்
கருத்தை ஏற்காதவர்
காந்தி;
தபால்
தலையில் மட்டுமல்ல ;
நாம்
நடக்க வேண்டாம்மா - நம்
எண்ணத்திலும் தேசபிதாவை
ஏந்தி ?
----

செங்க்கொடியே! என் செல்ல மகளே !
சேவிக்க தகுந்துன் சேவடி துகளே !
ஒன்றுரைப்பேன் ; உன் தியாகத்திற்கு இல்லை
ஒப்பு ;
என்றாலும் - அதை
ஏற்பதுகில்லை ; அது தப்பு !.....

கவிஞர்
வாலி

Tuesday, August 23, 2011

விண்டோஸ் 7 வசதிகள்




விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது.
டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.

2.விண்டோக்களைக் கையாளுதல்: விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது. செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும். விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும். பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம். விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.

3. பல மானிட்டர் செயல்பாடு: ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.

4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக: விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும். இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.
5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு: நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும். மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.

6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி: என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது. இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.

7.டாஸ்க் பாரில் போல்டர்கள்: வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம். இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது.
அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம். அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.

Wednesday, July 27, 2011

மொபைல் நம்பர் ?! எந்த நெட்வொர்க் ? எந்த ஏரியா?



என்ன யோசிக்கிறிங்க..??
மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!! அப்படினு யோசிக்கிறிங்களா? அப்படி யோசிச்சிங்கனா..இங்க போங்க..
போயி மொபைல் நம்பரின் முதல் நான்கு நம்பர்களை வைத்து தேடி கண்டுபிடிச்சுக்கோங்க..
http://en.wikipedia.org/wiki/Mobile_telephone_numbering_in_India


சரிதானே..?

Thursday, July 7, 2011

கல்மா "டீ"




சில வாரங்களுக்கு முன் ஞாநி கல்கியில் எழுதியது...

“திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.”

தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே?

தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க. அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க.

‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே. நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’

அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது. ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”

தற்போது லேட்டஸ்ட் கல்மாடிக்கு டீ கொடுத்தவர் சஸ்பெண்ட் என்பது தான்.

ப்ரிட்டிஷ் ராஜ்யத்தில் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அந்தமானின் செல்லுலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்போது இத்தாலிய காங்கிரஸ் ராஜ்யத்திலும் நான்கு பேர் அந்தமான் செல்லுலருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவும் ஒருவகை தண்டனைதான் என்றாலும், இவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடியதற்காக அங்கு அனுப்பப்படவில்லை, சிலரை சிறையில் சுதந்திரமாக இருக்க விட்டதற்காக.

ஐக்கிய ஊழல் கூட்டணியின் இரண்டாவது பகுதி ஆட்சிக்காலத்தில் இதுவரை வெளிவந்துள்ள ஊழல்களில் இரண்டாமிடம் பெற்றுள்ள காமன்வெல்த் ஊழல்களின் சூத்ரதாரியாகக் கருதப்படுபவர் சுரேஷ் கல்மாடி. இனிமேல் இவரை இனிமேலும் காபந்து செய்தால் ஆட்சி செலுத்துவது கடினம் என்ற மிகவும் கட்டாயமான சூழலில், இவர்மேல் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில் திஹார் சிறைவாசிகளின் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் நோக்கில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் திஹார் சிறைக்கு முன்னறிவிப்பின்றி விஜயம் செய்துள்ளார். அப்போது, சுரேஷ் கல்மாடி சிறை அதிகாரி ஒருவரின் அறையில் மிகவும் சுதந்திரமாகச் சிரித்துப் பேசியபடி, டீ, பிஸ்கட் மற்றும் இதர ஸ்நாக்ஸ் வகையறாக்களை வகை தொகையின்றி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாராம். இது சிறை விதிகளின்படி அத்து மீறல் என்பதால், கல்மாடிக்கு டீ கொடுத்து உபசரித்த அதிகாரிகள் நால்வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்நால்வரும் அந்தமான் செல்லுலர் சிறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வெளியில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தவர் சிறையிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்றதால் வந்த வினை இது என்றாலும், அந்த நீதிபதி சுத்த விவரம் தெரியாதவராக இருப்பார் போலும். வெறுமனே டீ கொடுத்ததற்காக அந்தமானுக்கு மாற்றல் என்றால், தமிழக புழலில் நிகழும் வைபவங்களுக்காக அங்கிருக்கும் அதிகாரிகள் எங்கெங்கெல்லாம் மாற்றப்படுவர்? வாரமிருமுறை அரசாங்கமே அசைவ விருந்து போடுகிறது, தவிர சிறைக்குள் பல சட்டவிரோதமான வியாபாரங்களும் அமோகமாக நடக்கிறதென்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இருக்கவே இருக்கு அண்ணா பிறந்த நாள்... இதற்கு என்ன செய்வது?



கல்மாடிக்கு சலுகை கொடுத்தவருக்கு, தண்டனை என்றால் ராசா, மாறன், கல்மாடி என்று ஒரு பெரிய ஊழல் கூட்டத்தை தன் அரசாங்கத்தில் அமைச்சர்களாக வைத்துக்கொண்டு அவர்களுக்கு வக்காளத்து வாங்கியவருக்கு என்ன தண்டனை ?

Tuesday, June 28, 2011

இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்.

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் (மடிக்கணினி) வழங்க இருக்கிறது, மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட வாய்ப்பு அதிகம் இதை தடுக்க அரசு கொடுக்க்கும் லேப்டாப்-ல் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒரு முழுமையான ரிப்போர்ட்.



வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசம் இந்த இரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தடை செய்வதன் மூலம் பெரும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் பெரும்பாலும் ஆபாச நிகழ்ச்சிகள் இந்தியாவில் தெரிவதில்லை என்றாலும் இணையம் வழியாக ஆபாச படம், மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிகை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. இனி பள்ளி மாணவர்கள் கையிலும் , கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகம், உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அது ஆபாச வார்த்தை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். இதைத்தடுக்க அரசு கொடுக்கும் மடிக்கணினியில் என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்.


* ஆபாச தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்-ல் தெரியக்கூடாது. இதற்காக கணினியுடன் இணைந்த ஆபாசதள தடுப்பு மென்பொருள் சேர்ந்தே இருக்க வேண்டும்.( Uninstall செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும்).

* குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை கொடுத்து தேடினால் முடிவு காட்டப்படக்கூடாது.

* MP4 , 3GP போன்ற வீடியோ கோப்புகள் கணினியில் Play செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும் அல்லது , இந்த கோப்புகளை லேப்டாப்-ல் காப்பி செய்தால் உடனடியாக Delete ஆகும்படி இருக்க வேண்டும்.

* சமூக வலைதளங்களான பேஸ்புக் , டிவிட்டர் ,ஆர்குட் போன்ற தளங்களை பயன்படுத்த முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.

* வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம் இருக்க வேண்டும்.

* Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.

கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான், அந்த நாட்டில் இளைஞர்கள் இணையதளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாச தளங்களை காட்டியதற்காக கூகிளுக்கு சீனாவில் இடம் இல்லை, இப்போது இந்த பதிவின் முக்கியத்துவம் நமக்கு தெரிந்திருக்கும். அரசு கொடுக்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இங்கு குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறையும். இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு அதிகாரிகளிடமும் நம் நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமை.

பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.

நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க

டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை

Thursday, June 16, 2011

கூகுள் குரோம் வெப்பிரவுசர்



கூகுள் குரோம் வெப்பிரவுசர்(google chrome browser) வழங்கும் வெப் ஸ்டோர்(Web Store) ல் பல அப்பிளிக்கேசன்ஸ்(applications) மற்றும் கேம்ஸ்(games) இலவசமாக கிடைக்கின்றன. அப்பிளிக்கேசன்ஸை எளிதாக இன்ஸ்டால் செய்து பிரவுசரிலேயே இயக்கலாம். இன்ஸ்டால் செய்த கேம்ஸ் மற்றும் அப்பிளிகேசன்ஸ் பிரவுசரிலேயே இணைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் பிரவுசரை இயக்கி அப்பிளிகேசனை இயக்க முடியும். மேலும் பல தீம்கள்(themes) மற்றும் எக்ஸ்டென்ஸஸ்(extensions) குரோம் பிரவுசருக்கென கிடைக்கின்றன.



வெப் ஸ்டோர்(Web store)
https://chrome.google.com/webstore?hl=en-US


சில முக்கியமான கேம்ஸ் மற்றும் அப்பிளிகேசன்ஸ்
கோபக்கார பறவைகள்( Angry Birds )
https://chrome.google.com/webstore/detail/aknpkdffaafgjchaibgeefbgmgeghloj?hl=en-US

பிரைவேட் ஜோ( Private Joe )
https://chrome.google.com/webstore/detail/bddhcbcefccaggaloclldffhobmecjfj?hl=en-US


குயிக் நோட்ஸ்(Quick Notes)
https://chrome.google.com/webstore/detail/mijlebbfndhelmdpmllgcfadlkankhok?hl=en-US

அட்வான்ஸ்டு இமேஜ் எடிட்டர்(Advanced Image Editor)
https://chrome.google.com/webstore/detail/dafkakmjmhfnnfclmjdfpnbmdeddkoeo?hl=en-US

குறிப்பு: இந்த அப்பிளிக்கேசன்ஸ் மற்றும் கேம்ஸ் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சிறப்பாக இயங்கும்.

Tuesday, May 31, 2011

என் இசை ராஜாவுக்கு பிறந்தநாள் ...

பன்னையபுரத்தில் இருந்து கிளம்பிய இசை வேட்டு
பக்கின்கார்ம்க்கு போட்டது கோட்டு சூட்டு
MSV காலத்துல அவர் தான் யூத்
இன்று வரை அவர் இசைக்கு போட்டி இல்லை !
அவர் மகன் யுவனையும் சேர்த்து! !

வருகிற ஜூன் 3 ஆம் தேதி என் இசை ராஜாவுக்கு பிறந்தநாள் ...
அவருக்கு எனது பிறந்த நாள் பரிசு தான் மேலே நீங்கள் வாசித்த கவிதை.






Wednesday, April 27, 2011

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்..

கலைஞர் கருணாநிதி கவிதை (அண்ணா கவிதாஞ்சலி )

நம் முதல்வர் அவர்கள் மறைந்த அண்ணாதுரை இறந்த பொது எழுதிய கவிதை, அதில் இருந்து சில வரிகளை இங்கே ......



எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?



தற்போது தி மு கழகத்தில் நடைபெறும் 2 ஆம் அலைகற்றை பிரச்னையை மனதில் வைத்து மேற்கண்ட வரிகளை மீண்டும் படித்து பாருங்கள் ..... என்ன ஒரு தொலைநோக்கு சிந்தனை ..........

Saturday, March 12, 2011

இறைவனடி இளையராஜா

இந்த இசை அரசனின் இசையலைகள் புரட்டிப் போட்ட கோடானு கோடி சிப்பிகளில் நானும் ஒருவன். இசை ஞானம் இல்லாதவரையும் இழுத்துத் தன்னுடன் பயணிக்க வைக்கும் அந்த சக்தி. எத்தனை பாடல்கள். அடேயப்பா. மனதின் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுண்டி இழுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள்.
இசையைப் பற்றி என்ன தெரியும் என்று என்னைக் கேட்பீர்களானால் - இளையராஜாவின் இசையை ரசிக்க நன்றாகத் தெரியும் என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த இசையைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. தத்து பித்தென்று எதையாவது எழுதிவைக்க மனம் ஒப்பவில்லை. நுணுக்கமாக எழுத எனக்கிருந்த இசைஅறிவு போதுமானதாகத் தோன்றவில்லை.


சிறுவயது தொட்டு திரையிசையை ரசித்து வருபவன் தான். இருப்பினும் சமீபகாலமாக அடிக்கடி வெளியூர் பயணம் தந்த தனிமை, இசையுடன் இன்னும் நெருங்கி உலா வர வாய்ப்பாக அமைந்தது. வீட்டில் பெரிய ஸ்பீக்கர்களில் கேட்கும் பொழுது புலப்படாத பல நுணுக்கமான இசைகளை ஹெட் போனில் கேட்கும் பொழுது தான் ரசிக்க முடிந்தது. அதுவும் நம் இளையராஜாவின் இசை என்றால் ஆங்காங்கே சிறு சிறு இசைத்துணுக்குகள் ஒளிந்திருக்கும். அமைதியான இரவுகளில் இளையராஜாவின் இசை தரும் சுகத்தை உணர மட்டும்தான் முடியும். அப்படி ஊன்றி கவனிக்கும் பொழுதுதான் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை உணரமுடியும்.

சமிபத்தில் மலபார் கோல்ட் விளம்பரத்துக்கு இளையராஜா இசை அமைத்த அந்த பாடலை கேட்டு மயங்கினான் . சில நொடிகள் மட்டும் வரும் விளம்பர பாடலுக்கு மிக நன்றாக இசை அமைத்து என்னை வியக்க வைத்தார்.


ஆனால் அந்த பாடலின் மெட்டை எங்கோ நன்கு கேட்ட மாதிரி மனதுக்கு தோன்றியது. இளையராஜாவின் இசைக்கோர்வை (music composition) அவரின் மற்றொரு தனித்தன்மை.இசைக்கோர்வையை விமர்சிக்கும் அளவுக்கு அறிவு போதாது எனினும், அந்தபாடலை அவரது இசையில் வந்த ஒரு பாடலுடன் ஒபிட்டு என்னால் முடிந்தவரை இங்கே வெலிட்டுள்ளேன். நண்பர்கள் கேட்டு விட்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் .


Click here to Hear the Song

சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே என்னை ஊக்கப் படுத்தும்.

Friday, March 4, 2011

பயணம்

எனது காரில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தாலும் எனக்கு எனது காரை நானே ஓட்டி செல்வதில் கொள்ளை பிரியம். அதுவும் இரவு நேரத்தில் இளையராஜா பாடல்களுடன் வண்டி ஒட்டுவது தனி சுகம். எனது அம்மா , அப்பா ,மனைவி உடன் நீண்ட தூரம் இரவு பயணம் செல்வது அலாதி சுகம். இதுமாதிரி எனக்கு பல்வேறு பயண அனுபவம் உண்டு. ஆனால் கடந்த மாதம் 16 ஆம் தேதி எனக்கு வித்தியாசமான , ஒரு உணர்சிபுர்வமான கார் ஒட்டும் பயணமாக அமைந்தது.

ஆம் எனது மனைவியை பிரசவத்துக்காக எனது மாமா ஊரில் இருந்து அருகில் உள்ள விளாத்திகுளம் சுமார் 25 KM வரை அழைத்து சென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். அன்று காலை தான் சென்னையில் இருந்து சுமார் 580 Km பயணம் செய்து கோவில்பட்டிக்கு வந்தேன். முதல் நாள் பயண களைப்பையும் மீறி எனது மனைவி ஊருக்கு சென்றேன் .

என் மனைவிக்கு விளாத்திகுளம் அருகில் உள்ள சூரங்குடி தான் சொந்த ஊர். அங்கு இருந்து விளாத்திகுளம்25 KM சற்று மோசமான சாலை தான் . இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இரவு 10 மணிக்கு எனது மனைவிக்கு பிரசவவலி வர நான் பரபரப்பாக எனது காரில் மனைவியுடன் அந்த மோசமான ரோட்டில் 25 KM பயணம் செய்து விளாத்திகுளம் அடையும் போது எனக்கு உண்டான ஒரு உணர்சிபுர்வமான பயணம் என் வாழ்கைக்கு மறக்க முடியாத பணயமாக அமைந்தது .


18.02.2011 அன்று காலையில் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் 24.02.2011 அன்று ஆஸ்பத்திரி இருந்து எனது மனைவி , மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு மீண்டும் சூரங்குடி செல்லும் போது எனது பயண அனுபவத்தை எனது மனைவியுடன் பேசி கொண்டு செல்லும் போது மனதுக்கு இதமாக இருந்தது .

அன்று மகாபாரதத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக (தேரோட்டியாக) சென்றான். அர்ஜுனன் போரில் வென்றான்.

இந்த கலயுகத்தில் கண்ணன் மித்திரனுக்கு காரோட்டியாக சென்றான் . மித்திரனும் தற்போது நாட்டில் நடக்கும் போட்டி, சூழ்ச்சி, வஞ்சகம் போன்ற பல செயல்களில் இருந்து வெற்றி பெறுவான் என நம்புகிறான் .