Kadal Kavidai

Thursday, October 28, 2010

அஞ்சலி


எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல


விலகாமல் என்றென்றும்..


29-10-2010 அன்று உன் பிறந்த நாள் நினைவாக....







Thursday, October 21, 2010

நன்றி



கடந்த 19-10-2010 அன்று என் பிறந்தநாள் அன்று என் Cell Phone , Yahoo,Orkut,Facebook க்கு காலை முதல் மாலை வரை வாழ்த்து சொன்ன அனைவர்க்கும் நன்றி....


நாளொன்றும் மற்றைய நாட்களிலிருந்து வேறுபட்டது இல்லை என்றாலும் வழக்கத்திலிருந்து மாற்றாக ஒரு வேறுபடுத்த சில சமயம் தேவையாயிருக்கிறது.

நேற்றைய மாலைக்கு
இன்றைய காலையும்
பிற்பகல் நினைவில்
இன்றைய காலையும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்னால்
திரும்பிப்பார்த்தால் 29 வயசு


Sunday, October 10, 2010

திருமணம்!


திருமண
விருந்துதான்...
ஆனாலும்
கை நனைக்க
மனமில்லை...
காதலி
திருமணம்!