Kadal Kavidai

Wednesday, April 27, 2011

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்..

கலைஞர் கருணாநிதி கவிதை (அண்ணா கவிதாஞ்சலி )

நம் முதல்வர் அவர்கள் மறைந்த அண்ணாதுரை இறந்த பொது எழுதிய கவிதை, அதில் இருந்து சில வரிகளை இங்கே ......



எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?



தற்போது தி மு கழகத்தில் நடைபெறும் 2 ஆம் அலைகற்றை பிரச்னையை மனதில் வைத்து மேற்கண்ட வரிகளை மீண்டும் படித்து பாருங்கள் ..... என்ன ஒரு தொலைநோக்கு சிந்தனை ..........

No comments:

Post a Comment