
ஒரு மாணவன் எழுந்து கேட்டான்”ஐயா,கணினி என்ன பால்?”
இதற்குப் பதிலளிக்காமல் ஆசிரியர்,ஆசிரியர் மாணவர்களையும் மாணவிகளையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து அவர்களையே தீர்மானம் செய்து அவர்கள் முடிவுக்கான மூன்று காரணங்கள் எழுதச் சொன்னார்.
மாணவர்கள் கணினி பெண்பால் எனத்தீர்மானித்து அதற்கான கீழ் வரும் காரணங்களை எழுதினார்கள்—
1அவற்றின் உள்ளே உள்ள அடிப்படை ஏரணத்தைப் படைத்தவன் அன்றி வேறொருவரும் அறிய இயலாது.
2.சின்னச் சின்னத்தவறுகள் கூட நீண்ட கால நினைவில் வைத்திருந்து, வேண்டும்போது எடுக்க இயலும்.
3.ஒன்றை சொந்தமாக்கிக் கொண்டால் அதன்பின் அதற்கான உபகரணங்களில் பாதிச் சம்பளம் போய் விடும்.
மாணவிகள் அது ஆண் என முடிவு செய்து எழுதினார்கள்—
1.எல்லாத் தகவலும்இருக்கும்.ஆனால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாது.
2.அவை நமது பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும்.ஆனால் பாதி நேரம் அவையே பிரச்சினையாகி விடுகின்றன.
3.ஒன்றைச் சொந்தமாக்கிய பின்தான் தெரியும் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் இதை விடச் சிறந்தது கிடைத்திருக்கும் என!
ஆசிரியர் மாணவிகள் வென்றதாக அறிவித்தார்.
No comments:
Post a Comment