Kadal Kavidai

Friday, March 2, 2012

குடும்ப அட்டை புதுப்பிப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு


குடும்ப அட்டை புதுப்பிப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு.

இணையத்திலும் பதியலாம்


click here for the link

Tuesday, February 7, 2012

எதிர்காலத்தில் குழந்தை ?



எதிர்காலத்தில் குழந்தை இப்படியும் பிறக்குமோ?!

Sunday, January 1, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்


ஆண்டுகளால் மனிதர்கள் பெருமை பெறுவதில்லை;
மனிதர்களால்தான் ஆண்டுகள் பெருமை பெறுகின்றன
செயல்களால் புத்தாண்டை உயர்த்துவோம்.

வாழ்த்துக்கள்
வைரமுத்து.- on Twitter.

Friday, December 23, 2011

வைரமுத்து அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சினையில்``படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்''
கவிஞர் வைரமுத்து அறிக்கை


சென்னை, டிச.22-

``முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப்பாளிகள் களத்தில் இறங்குவோம்'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.



அறிக்கை

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

``முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் ïனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

படைப்பாளிகள்

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். ``முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்

Monday, December 19, 2011

எல்.ஆர்.ஈஸ்வரி தான் ஒஸ்தி.



1958-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பின்னணி பாடகி, எல்.ஆர்.ஈஸ்வரி. 50 வருடங்களை தாண்டி திரையுலகில் இருந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


சிவாஜிகணேசன்-சாவித்ரி நடித்த ‘பாசமலர்’ படத்தில் நான் பாடிய “வாராயோ தோழி வாராயோ” என்ற பாடல்தான் அவரை பிரபலமாக்கியது.

அவர் பாடலை கேட்கும் போதே ஆட்டம் தானாக வரும் . அவர் பாடிய பாடல்களில் அதிக பாடல்கள் துள்ளல் இசை பாடல்கள் .(துள்ளல் இசை பாடல்கள் = குத்து பட்டு :- நன்றி இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி ஷுன்முகம் )

சமிபத்தில் ஒஸ்தி படத்தில் இருந்து "கல்லாச கல கலா" என்ற பாடலை TR உடன் இனைந்து பாடியுள்ளார் . இந்த வயதிலும் மிக நன்றாக உள்ளது அவரது குரல் வளம்.


என் நண்பர்கள் பாடலை கேட்டு விட்டு என்னிடம் சொன்னது :-- இந்த தள்ளாத வயதிலும் துள்ளல் இசை பாடல்கள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி தான் ஒஸ்தி.

clicl here to hear kalasala kalasala.mp3

Saturday, December 3, 2011

கணினி என்ன பால்?!

இந்திஆசிரியர் பால் வேறுபாடுகளைப் பற்றி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.தமிழ் போல் இல்லாமல் இந்தியில் அஃறிணைக்கும் பால் வேறுபாடுகள் உண்டு.மூக்கு பெண்பால் என்றும் நாக்கு ஆண்பால் என்றும் என்னென்னவோ சொல்வார்கள்.



ஒரு மாணவன் எழுந்து கேட்டான்”ஐயா,கணினி என்ன பால்?”


இதற்குப் பதிலளிக்காமல் ஆசிரியர்,ஆசிரியர் மாணவர்களையும் மாணவிகளையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து அவர்களையே தீர்மானம் செய்து அவர்கள் முடிவுக்கான மூன்று காரணங்கள் எழுதச் சொன்னார்.


மாணவர்கள் கணினி பெண்பால் எனத்தீர்மானித்து அதற்கான கீழ் வரும் காரணங்களை எழுதினார்கள்—


1அவற்றின் உள்ளே உள்ள அடிப்படை ஏரணத்தைப் படைத்தவன் அன்றி வேறொருவரும் அறிய இயலாது.


2.சின்னச் சின்னத்தவறுகள் கூட நீண்ட கால நினைவில் வைத்திருந்து, வேண்டும்போது எடுக்க இயலும்.


3.ஒன்றை சொந்தமாக்கிக் கொண்டால் அதன்பின் அதற்கான உபகரணங்களில் பாதிச் சம்பளம் போய் விடும்.



மாணவிகள் அது ஆண் என முடிவு செய்து எழுதினார்கள்—


1.எல்லாத் தகவலும்இருக்கும்.ஆனால் சுயமாகச் சிந்திக்கத் தெரியாது.


2.அவை நமது பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும்.ஆனால் பாதி நேரம் அவையே பிரச்சினையாகி விடுகின்றன.


3.ஒன்றைச் சொந்தமாக்கிய பின்தான் தெரியும் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் இதை விடச் சிறந்தது கிடைத்திருக்கும் என!


ஆசிரியர் மாணவிகள் வென்றதாக அறிவித்தார்.

Thursday, November 24, 2011

ஜார்ட்-வேர்ட் ப்ராசசர்

லிடுர்ட்பேட் மற்றும் நோட்பேட் பற்றி அறிந்திருப்பீர்கள். பலரும் பயன் படுத்தி வருவீர்கள். இவற்றிற்கு மாற்றாக நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.



இதன் இன்னொரு சிறப்பு, இதில் மெனு தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடத் தேவை யில்லை. அதாவது, கர்சரை மெனு அருகே கொண்டு சென்றாலே, மெனு விரிந்து கொடுக்கிறது. ஐகான்கள் மற்றும் பிற மெனுக்கள் கிடைக்கின்றன. இதிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், வழக்கம்போல கிளிக் அடிப்படையிலான இயக்கத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
இதன் இன்டர்பேஸ் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவை Minimal (NotePad போல), Compact, மற்றும் Classic ஆகும்.


இதன் சில அம்சங்களைக் காணலாம். word, page, line மற்றும் character ஆகியவற்றை எண்ணி அறியலாம். தேதி, நேரம், படங்கள், ஹைப்பர்லிங்க், டேபிள், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஈக்குவேஷன்கள், ஆப்ஜெக்ட்டுகள் ஆகியவற்றை விரும்பும் இடத்தில் இணைக்கலாம். டிக்ஷனரி, தெசாரஸ் ஆகியவற்றுடன் ஸ்பெல் செக் வசதி தரப்பட்டுள்ளது. பல பைல்களை இயக்கினால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு இயக்க டேப் வசதி தரப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் பயன்படுத்தி சலிப்பு கொண்டவர்களுக்கு இந்த ஜார்ட் டெக்ஸ்ட் எடிட்டர் வித்தியாசமாகவும், வசதிகள் பல கொண்டதாகவும் இருக்கும்.
இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதன் வேகம். மிக வேகமாகத் திறக்கப்பட்டு, இயக்கத்திற்குக் கிடைக்கிறது. இது மற்ற எந்த வேர்ட் ப்ராசசரிலும் கிடைக்காத ஒரு வசதி. மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராம் இயங்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதனை நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளோம். அந்த பிரச்னை இங்கு இல்லை. நான்கு விநாடிகளில் இந்த ஜார்ட் புரோகிராம் இயங்கத் தொடங்குகிறது.


இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்வதும் இன்ஸ்டால் செய்வதும் மிக மிக எளிது. இதனை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்தும் இயக்கலாம்.
www.jarte.com/download.htmlஎன்ற இணைய தள முகவரியிலிருந்து இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.

Saturday, November 19, 2011

ஏழாம் அறிவும்,வேலாயுதமும்!

நான் எப்போதுமே கொஞ்சம் தாமதம்.


எனவேதான் ஏழாம் அறிவு ,வேலாயுதம் பற்றி எழுதுவதில் இவ்வளவு தாமதம்.


லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து விட்டேன்!


இதோ----




மனிதர்கள் ஆறறிவு உள்ளவர்கள் என்று சொல்கிறோம்.


இந்த ஆறறிவுகள் எவை?


தொல்காப்பியர் சொல்கிறார்---


“ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே”


மெய்,வாய்,மூக்கு,கண்,காது ஆகியவற்றோடு மனம் என்பதை ஆறாவது அறிவாகச் சொல்கிறார் தொல்காப்பியர்.


இதையே நாம் பகுத்தறிவு என்கிறோம்.


அப்படியானால் ஏழாம் அறிவு என்பது என்ன?


திரைப்படம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.நான் பார்க்க வில்லை
காலத்தைக் கடந்தது முக்காலமும் அறியும் திறன்தான் ஏழாம் அறிவா?


அக்காலத்தில் ஞானிகளுக்கு ஞான திருஷ்டி இருந்ததுஎன்று சொல்வார்களே அதுதான் ஏழாம் அறிவா?


அப்படியென்றால் அது வேண்டவே வேண்டாம்! வருவதைத் தெரிந்து கொண்டால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.ஒரு படத்தில் மற்றவர் மனதில் இருப்பதை அறியும் சக்தி பெற்று விவேக் கஷ்டப்படுவாரே,அது போல.


வேண்டாம் ஏழாம் அறிவு!


ஏழாம் அறிவைப் பற்றிப் பேசி விட்டோம்.


இனி வேலாயுதம்.


சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களையெல்லம் துன்புறுத்தி,இந்திரனையும் சிறைப் படுத்தி விட்டான்.


அவனை அழிப்பதற்காக முருகன் உருவானான்.


முருகன் போருக்குச் செல்லும்போது,அன்னை பார்வதி முருகனிடம் ஒரு சக்தி வேல் கொடுத்தாள்,சூரனைக் கொல்லும் ஆயுதமாய்.அதுதான் வேலாயுதம்.


சூரனையே பிளந்த ஆயுதம் வேலாயுதம்!


காக்க காக்க கனக வேல் காக்க!

Sunday, November 13, 2011

108 சேவை

இன்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தி
இது.





108 ஆம்புலன்ஸ் சேவை என்பது மக்களுக்கு உதவுவதற்காக சென்ற ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத சேவை. இந்த சேவையின் மூலம் நேரத்தில் இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கப்பெற்று உயிர் பிழைத்தவர்களை நான் அறிவேன்.


ஆனால் பாருங்கள் ஒரு நாளில் இவர்கள் பெறும் 25000 அழைப்புகளில் சுமார் 4000 அழைப்புகள்தான் உண்மையானவை. மற்ற 85% கிண்டல், கேலி, பொய்யான அழைப்புகள், குழந்தைகளின் விளையாட்டு அழைப்புகளாம்.


நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுருத்துவது இங்கே இந்த நேரத்தில் மிகவும் அவசியம் எனத் தெரிகிறது. குழந்தைகள் தெரிந்து செய்வதில்லை. எனவே, இந்த சேவையின் முக்கியத்துவம் குறித்த பாடத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எடுப்பது அவசியம் ஆகிறது. குழந்தைகள் மட்டுமன்றி, நாமும் இத்தகைய செயல்களைச் செய்து இந்த உன்னத சேவைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


கடலூரிலிருந்து ஒரே எண்ணிலிருந்து ஒரு மனிதர் 1473 அழைப்புகளைச் செய்திருக்கிறாராம். மன அழுத்தம் கொண்ட நபர்கள் / குடிபோதையில் இருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் உணர மறுக்கும் ஒரு உண்மை என்னவென்றால், அவர்கள் வீட்டிலும் என்றேனும் எவருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதுதான்.


இந்த விஷயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இதுகுறித்த தேவையான விழிப்புணர்வை வழங்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி: ஹிந்து நாளிதழ்

Tuesday, November 8, 2011

இனி இதுவும் நடக்கலாம் ......



இனி இதுவும் நடக்கலாம் ......

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!
ஒரு வெப்சைட்டினை மதிப்பீடு(website value) செய்வது எப்படி? வெப்சைட்டின் பண விகிதம், விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டும்? என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்..

http://www.cwire.org/website-value-calculator/




இந்த www.vino-kannan.blogspot.comன் மதிப்பு $67 என காட்டுகின்றது..பலே!! பலே!!
அலக்ஸா ரேங்க்(Alexa Traffic Ranking): 7,857,181
www.alexa.com

Friday, November 4, 2011

யு.எஸ்.பி. ப்ளாஷ் லாக்

உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன் படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர் (Predator) என்ற புரோகிராம் தருகிறது. இதனை www.montpellier-informatique.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி பிரிமியம் புரோகிராம் பெறலாம்.




நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வெளியே சென்றாலும், பிரிடேட்டர், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.
பிரிடேட்டர் புரோகிராமினை, விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு. அல்லது நீங்கள் விரும்பும் போது, அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின், தொடர்ந்து நீங்கள் கம்ப்யூட்டரில் பணியை மேற்கொள்ளலாம். சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால், கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன், உங்கள் மானிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.

நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து, பணியைத் தொடரலாம். மானிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும். இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி, மீண்டும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து, பாஸ்வேர்டைத் தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால், கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

அனுமதி பெறாதவர் கம்ப்யூட்டரை இயக்க முற்படுகையில், பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.

இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டிலும் காட்டும். இதனால், இன்னொரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த அக்கவுண்ட்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை, பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து டேட்டா வினையும் ஒருவர் காப்பி செய்தாலும், அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.

ப்ளாஷ் தொலைந்து போனால், கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கம்ப்யூட்டர் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.

தவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், கம்ப்யூட்டரிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கலாம். முயற்சி செய்து பாருங்களேன்.

Friday, October 14, 2011

இவர்களும் நானும் ......












இவர்கள் வரிசையில் நான் ??
எப்படி ?

......

எந்த ஒரு பள்ளியிலும் யூனிஃபார்ம் அணிந்த பிள்ளைகளுக்கு மத்தியில் யாராவது ஒரு பிள்ளை வண்ண உடை அணிந்து காணப்பட்டால் அது பிறந்தநாள்குழந்தை என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வாய் நிறைய சிரிப்பும், கையில் சாக்லெட் டப்பாவுமாக அன்றைக்கு முழுக்க அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். ரொம்பவும் வயதில் சிறியதாக இருந்தால் சாக்லெட் டப்பாவில் பாதியை அதுவே காலி பண்ணிவிடும்.
‘பாப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லெட் குடுத்தியா? டப்பா காலியா இருக்கு?’

‘கௌஷிக் மூணு சாக்லெட்ட புடுங்கிட்டான்ம்மா.’

‘அதுசரி. நீ எல்லாருக்கும் குடுத்தியா?’

‘சி.வசுமதி வாங்கி தின்னுட்டு நீ குடுக்கவே இல்லெடின்னா.’

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆளாளுக்கு, ஊர் ஊருக்கு மாறுபடுகின்றன.

ஆனால் சிறுவயது முதல் எனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேறு விதமாக இருந்தது.

"கொடியது கொடியது இளமையில் வறுமை. "

என்பதற்கு எடுத்துகாட்டு அனேகமாக நானாக தான் இருக்கும். வீட்டில் ஒரே ஆண் பிள்ளை என்றாலும் எனது எந்த ஒரு பிறந்த நாளுக்கும் கேக் வெட்டியதாக நினைவு இல்லை.

பிறகு வசதி மற்றும் எனக்கு வேலை கிடைத்த பின் ஏனோ பிறந்த நாளுக்கு கேக் வெட்ட மணமில்லை.

எனது அப்பா மிக அதிகமாக சாமி கும்பிடும் பழக்கம் உடையவர். என்னையும் சாமி கும்பிட சொல்லுவர். ஒரு காலகட்டத்தில் இது ஒரு மூடநம்பிக்கை என்று உணர்த்த நான் பகுத்தறிவோடு கோவிலுக்கு செல்வதை தவிர்த்தேன் . இதற்கு எனது காலம்சென்ற சித்தப்பா திரு முத்துசாமி தான் முன் உதாரணம் . (முத்துசாமி சித்தப்பா எனது அம்மாவின் சகோதரி கணவர்.) அவர் மாக்சிச சிந்தனை உடையவர். சேகு வேரா , லெனின் , பிடல் காஸ்ட்ரோ போன்றவர்களை எனக்கு புத்தகம் வழியாக அறிமுக படித்தினார். அவர் முலமாக தமுஎச , DYFI போன்றவற்றில் என்னை இணைத்துகொண்டேன்.

பொதுவாக நங்கள் இருவரும் ஒன்றாக சென்று தான் தீபாவளி மற்றும் எங்கள் பிறந்த நாள் (எனக்கு 19 -10 சித்தப்பாவிற்கு 29 -10 ) க்கு துணி எடுப்போம்.வாழ்கை சக்கரம் சீராக சென்று கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு கொடிய புற்று நோய் தாக்கியது .நண்பன் ராமமூர்த்தி அப்பொழுது மருத்துவபடிப்பு படித்துகொண்டு இருந்தான். அவனிடம் புற்று நோய் பற்றி கேட்டபோது இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றான்.

பல இடங்களில் பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சென்னை Appollo மருத்துவமனை சென்று ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்ற பிறகும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். அப்போது சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை பற்றி தெரிந்து கொண்டேன்.

இந்த அடையாறு புற்று நோய் மருத்துவமனை மத்திய அரசிடம் நீதிகளை பெற்று புற்று நோய் தன்மைக்கு தகுந்தால் போல் இலவசமாக சிகிச்சை செய்கிறது. மேலும் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கதுக்காக மத்திய அரசிடம் இருந்தும் , பொது மகளிடம் இருந்தும் நன்கொடை பெற்று புற்று நோய்க்கு மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

சித்தப்பா இறந்த பின் ஏனோ எனக்கு மீண்டும் பிறந்த நாள் கொண்டாட விருப்பம்இல்லை. எனவே அந்த தொகையை கடந்த சில வருடங்களாக அடையாறு புற்று நோய் மருத்துவ ஆராய்சிக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறேன் .

இந்த பதிவில் புகைபடத்தில் உள்ள அனைவரும் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமைக்கு நீரந்தர கொடையாளிகள். இந்த வரிசையில் நான் கடைசியாக இருப்பேன் என நம்புகிறேன்.

நான் இறபதற்கு முன் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கபட்டால் நான் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்...

எனவே நண்பர்களே உங்கள் வருமானத்தில் சிறு பகுதியாவது மருத்துவ ஆராய்ச்சி கொடுங்கள்.... இந்த பதிவை நான் எழுதிகொண்டிருக்கும் பொழுது புற்று நோயால் இறந்து விட்ட Apple Co -Founder Steve jobs அவர்களுக்கு எனது அஞ்சலியை சபர்பிகிறேன் ....

விழுவதும் ! எழுவதற்கே!!

Click Here to View Cancer Institute Web Page.



இணைப்பு :
ஆண்டு வரிசையாக அடையாறு புற்று நோய் மருத்துவமனை நன்கொடை ரசிது.









Saturday, October 8, 2011

என் தந்தை


தோற்றம் 25/12/1950 மறைவு 02/10/2011



தந்தை!
நமது முகவரி !
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!

இமையத்தின் வலிமை,
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குள் தாங்கும்,
என் தந்தை குணம்!
யாரிடம் கிடைக்கும்!!

என் தந்தை மரணம்,
சொல்லமுடியாத, இழப்பு !
இந்த இழப்பை சொல்வதற்கு
வார்த்தைகள் இல்லை !!

மனம் பின்னோக்கி செல்லும்
தந்தையோடு வாழ்த்த, அந்த
காலத்தை காட்டும்!
கண்கள் குளமாகும் !

அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !!

Thursday, September 29, 2011

இவர்களும் நானும் ......












இவர்கள் வரிசையில் நான் ??
எப்படி ?

காத்திருங்கள் ...... அக்டோபர் 19 வரை ......


Tuesday, September 13, 2011

இந்தியன் ரயில் இன்போ

'இந்தியன் ரயில் இன்போ' வெப்சைட் கூகுள் குரோமிற்கு( google chrome browser ) பிரவுசர் நீட்டிப்பு(extension) ஒன்றை வழங்குகின்றது. இதனை இன்ஸ்டால் செய்தபின்பு பிரவுசரின் வலது மேற்புறத்தில் அமர்ந்துகொள்கின்றது. நமக்கு தேவையான போது இதனை கிளிக் செய்து ரயில் டிக்கெட் தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். முயற்சித்து பாருங்கள்..

லிங்க்:

இந்தியன் ரயில்வேஸ் .