
ஆம் எனது மனைவியை பிரசவத்துக்காக எனது மாமா ஊரில் இருந்து அருகில் உள்ள விளாத்திகுளம் சுமார் 25 KM வரை அழைத்து சென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். அன்று காலை தான் சென்னையில் இருந்து சுமார் 580 Km பயணம் செய்து கோவில்பட்டிக்கு வந்தேன். முதல் நாள் பயண களைப்பையும் மீறி எனது மனைவி ஊருக்கு சென்றேன் .
என் மனைவிக்கு விளாத்திகுளம் அருகில் உள்ள சூரங்குடி தான் சொந்த ஊர். அங்கு இருந்து விளாத்திகுளம்25 KM சற்று மோசமான சாலை தான் . இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இரவு 10 மணிக்கு எனது மனைவிக்கு பிரசவவலி வர நான் பரபரப்பாக எனது காரில் மனைவியுடன் அந்த மோசமான ரோட்டில் 25 KM பயணம் செய்து விளாத்திகுளம் அடையும் போது எனக்கு உண்டான ஒரு உணர்சிபுர்வமான பயணம் என் வாழ்கைக்கு மறக்க முடியாத பணயமாக அமைந்தது .
18.02.2011 அன்று காலையில் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
மீண்டும் 24.02.2011 அன்று ஆஸ்பத்திரி இருந்து எனது மனைவி , மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு மீண்டும் சூரங்குடி செல்லும் போது எனது பயண அனுபவத்தை எனது மனைவியுடன் பேசி கொண்டு செல்லும் போது மனதுக்கு இதமாக இருந்தது .
இந்த கலயுகத்தில் கண்ணன் மித்திரனுக்கு காரோட்டியாக சென்றான் . மித்திரனும் தற்போது நாட்டில் நடக்கும் போட்டி, சூழ்ச்சி, வஞ்சகம் போன்ற பல செயல்களில் இருந்து வெற்றி பெறுவான் என நம்புகிறான் .

