Kadal Kavidai

Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Monday, December 19, 2011

எல்.ஆர்.ஈஸ்வரி தான் ஒஸ்தி.



1958-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பின்னணி பாடகி, எல்.ஆர்.ஈஸ்வரி. 50 வருடங்களை தாண்டி திரையுலகில் இருந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.


சிவாஜிகணேசன்-சாவித்ரி நடித்த ‘பாசமலர்’ படத்தில் நான் பாடிய “வாராயோ தோழி வாராயோ” என்ற பாடல்தான் அவரை பிரபலமாக்கியது.

அவர் பாடலை கேட்கும் போதே ஆட்டம் தானாக வரும் . அவர் பாடிய பாடல்களில் அதிக பாடல்கள் துள்ளல் இசை பாடல்கள் .(துள்ளல் இசை பாடல்கள் = குத்து பட்டு :- நன்றி இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி ஷுன்முகம் )

சமிபத்தில் ஒஸ்தி படத்தில் இருந்து "கல்லாச கல கலா" என்ற பாடலை TR உடன் இனைந்து பாடியுள்ளார் . இந்த வயதிலும் மிக நன்றாக உள்ளது அவரது குரல் வளம்.


என் நண்பர்கள் பாடலை கேட்டு விட்டு என்னிடம் சொன்னது :-- இந்த தள்ளாத வயதிலும் துள்ளல் இசை பாடல்கள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி தான் ஒஸ்தி.

clicl here to hear kalasala kalasala.mp3

Saturday, March 12, 2011

இறைவனடி இளையராஜா

இந்த இசை அரசனின் இசையலைகள் புரட்டிப் போட்ட கோடானு கோடி சிப்பிகளில் நானும் ஒருவன். இசை ஞானம் இல்லாதவரையும் இழுத்துத் தன்னுடன் பயணிக்க வைக்கும் அந்த சக்தி. எத்தனை பாடல்கள். அடேயப்பா. மனதின் உணர்ச்சிகள் ஒவ்வொன்றையும் சுண்டி இழுத்த நூற்றுக்கணக்கான பாடல்கள்.
இசையைப் பற்றி என்ன தெரியும் என்று என்னைக் கேட்பீர்களானால் - இளையராஜாவின் இசையை ரசிக்க நன்றாகத் தெரியும் என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த இசையைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. தத்து பித்தென்று எதையாவது எழுதிவைக்க மனம் ஒப்பவில்லை. நுணுக்கமாக எழுத எனக்கிருந்த இசைஅறிவு போதுமானதாகத் தோன்றவில்லை.


சிறுவயது தொட்டு திரையிசையை ரசித்து வருபவன் தான். இருப்பினும் சமீபகாலமாக அடிக்கடி வெளியூர் பயணம் தந்த தனிமை, இசையுடன் இன்னும் நெருங்கி உலா வர வாய்ப்பாக அமைந்தது. வீட்டில் பெரிய ஸ்பீக்கர்களில் கேட்கும் பொழுது புலப்படாத பல நுணுக்கமான இசைகளை ஹெட் போனில் கேட்கும் பொழுது தான் ரசிக்க முடிந்தது. அதுவும் நம் இளையராஜாவின் இசை என்றால் ஆங்காங்கே சிறு சிறு இசைத்துணுக்குகள் ஒளிந்திருக்கும். அமைதியான இரவுகளில் இளையராஜாவின் இசை தரும் சுகத்தை உணர மட்டும்தான் முடியும். அப்படி ஊன்றி கவனிக்கும் பொழுதுதான் இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களில் இருந்து வெகுவாக வேறுபட்டிருப்பதை உணரமுடியும்.

சமிபத்தில் மலபார் கோல்ட் விளம்பரத்துக்கு இளையராஜா இசை அமைத்த அந்த பாடலை கேட்டு மயங்கினான் . சில நொடிகள் மட்டும் வரும் விளம்பர பாடலுக்கு மிக நன்றாக இசை அமைத்து என்னை வியக்க வைத்தார்.


ஆனால் அந்த பாடலின் மெட்டை எங்கோ நன்கு கேட்ட மாதிரி மனதுக்கு தோன்றியது. இளையராஜாவின் இசைக்கோர்வை (music composition) அவரின் மற்றொரு தனித்தன்மை.இசைக்கோர்வையை விமர்சிக்கும் அளவுக்கு அறிவு போதாது எனினும், அந்தபாடலை அவரது இசையில் வந்த ஒரு பாடலுடன் ஒபிட்டு என்னால் முடிந்தவரை இங்கே வெலிட்டுள்ளேன். நண்பர்கள் கேட்டு விட்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் .


Click here to Hear the Song

சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே என்னை ஊக்கப் படுத்தும்.

Monday, December 13, 2010

இசை பிரியர்களுக்கு மட்டும் .....

கொஞ்ச நாளா வேலை பளு காரணமாக ஒரு பதிவு கூட போட முடியல ...... நண்பர்கள் மனிக்கவும்... இது இசை பிரியர்களுக்கு... அதாவது வானொலி பண்பலை (FM) கேட்பது எனக்கு புடிக்கும்.. உலகில் உள்ள அணைத்து பண்பலை அலைவசிசையும் ஒரு தளத்தில் (Website) உள்ளது ... (Norway, Elam,Canada,Singapore,Srilanka,Germany,London BBC) ஆகிய தமிழ் ஒழிபரப்பு நிகழ்சிகளை கொஞ்சம் கேட்டு பாருங்கள் .....

இணைப்பு

http://www.tamilfms.com/